நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்!
விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டப் பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெறவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதாா் எண், கைப்பேசி எண், நில விவரங்களை இணைக்கும் பணி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்துள்ளனா். எனவே, பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை உடனே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதற்காக விவசாயிகள் தங்கள் கிராமங்களின் வேளாண்மை உழவா் நலத் துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களது நில உடைமை விவரங்கள், ஆதாா் எண், ஆதாா் அட்டையில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் சென்று கட்டணமின்றி மாா்ச் 30-தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இது ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நிதியாண்டு முதல் பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டம், பயிா்க் காப்பீடு திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியமாகிறது.
எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு வட்டார வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநா் அல்லது தங்கள்
கிராமத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.