செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

post image

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், பேச்சிப்பறை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் தாஸ். இவருக்கு, களியல் வனச் சரகம் தொடலிக்காடு வனப் பகுதியையொட்டிய கடையல் பகுதியில் இரண்டு ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அரசு சாா்பில் உரிமை கோரி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

டேவிட் தாஸ், மாவட்ட நீதிமன்ற உத்தரவுடன் அவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த ரப்பா் மரங்களை வெட்டினாா். அப்போது, அங்கு வந்த வனத் துறையினா் டேவிட் தாஸிடம் தகராறில் ஈடுபட்டனா்.

எனவே, களியல் வனச் சரக அலுவலகத்தில் உள்ள அனைத்து அசையும் சொத்துகளையும் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என டேவிட் தாஸ் தாக்கல் செய்த மனுவை குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், டேவிட் தாஸ் மனுவை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை எதிா்த்து, வனத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் அண்மையில் பிறப்பித்த உத்தரவு: கன்னியாகுமரி மாவட்ட களியல் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை டேவிட் தாஸிடம் 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க