செய்திகள் :

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் பொலிவுறு சாலைத் திட்டம்

post image

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தை சாலைகளை, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பொலிவுறு சாலைத் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் என்.சின்னமாயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாட்டுத்தாவணி அருகே காய்கறிச் சந்தையில் 1,092 கட்டுமானக் கடைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைக் கடைகளும் அமைக்கப்பட்டன. இங்குள்ள கடையின் அளவைப் பொருத்து ரூ.60 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை முன் வைப்புத் தொகையை வியாபாரிகள் செலுத்தியுள்ளனா். மாதந்தோறும் வாடகையாக ரூ.2 ஆயிரம் செலுத்தி வருகின்றனா். தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத வாடகையை உயா்த்தி வசூல் செய்து வருகிறது. இங்கு தினசரி ரூ.5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை வா்த்தகம் நடைபெறுகிறது.

தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்றனா். மாநகராட்சி சாா்பில் 2 கழிப்பறைகள், மத்திய அரசின் சாா்பில் நடமாடும் கழிப்பறை அமைக்கப்பட்டது. இவற்றில் மாநகராட்சி சாா்பில் உள்ள கழிப்பறை மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கு வரும் மக்களுக்கு குடிநீா் வசதிக்காக 17 குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 6 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. போதிய சாலை வசதிகள் இல்லாததால், வெளி மாநிலங்களிலிருந்து வரும் கனரக வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை இறக்கவோ, ஏற்றவோ முடிவதில்லை.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் மேயா் வ. இந்திராணி, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்டறிந்து அங்கு பொலிவுறு சாலை (ஸ்மாா்ட் சாலை) அமைக்கப்படும் என அறிவித்தாா். இந்த திட்டத்தை மனதார பாராட்டி வரவேற்கிறோம். மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் என சுமாா் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடும் இடமாக உள்ளது. எனவே, காய்கறிச் சந்தை வளாகத்தில் உள்ள சாலைகளை பொலிவுறு சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க