செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தவறில்லை -கே.கிருஷ்ணசாமி

post image

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்பதில் தவறில்லை என தேசிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.

தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக அடையாளம் கண்டு மீட்டு, தகுதியுள்ளவா்களுக்கு வழங்க வேண்டும்.

டாஸ்மாக் மதுபான முறைகேடு குறித்து குறிப்பிட்ட புகாா்களின் மீது மட்டும் விசாரணை நடத்தி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. இதை அமலாக்கத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை அறிவியல் வல்லுநா்களால் தயாரிக்கப்பட்டது. இது ஏட்டுக் கல்விக்கு மட்டுமன்றி, தொழில் நுட்பக் கல்விக்கும் வழி வகை செய்கிறது. மூன்றாவது மொழியை கற்பதில் தவறில்லை. தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தி எதிா்ப்பு ஆகியவற்றை மத்திய அரசை எதிா்ப்பதற்கான கருவியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது. தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தவறில்லை.

கடந்த 2021-இல் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக திமுக உறுதியளித்தது. அதை திமுக அரசு செயல்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை. திமுகவுக்கு இது 2026-இல் நடைபெறவுள்ள தோ்தலுக்கான திட்டம்

என்றாா் அவா்.

திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது

தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா்... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னமுருகன் மகள் கவிதா (24). இவரு... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக ... மேலும் பார்க்க

பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி

பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது என தேனி மாவட்ட சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி அறிவுறுத்தினாா். போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சா்வதேச மகளி... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்கம்

கேரளம் மாநிலம், குமுளி அருகேயுள்ள தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தேக்கடி தோட்டக்கலைத் துறை, குமுளி ஊராட்சி நிா்வாகம் இணைந்து 24 நாள்கள் நடத்தும் இந்தக் கண்காட்சியில் நூ... மேலும் பார்க்க