செய்திகள் :

திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது

post image

தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா் தனது திருமணத்துக்காக சங்கமம் என்ற திருமண வலைதளச் செயலியில் விவரங்களைப் பதிவு செய்தாா். இந்தச் செயலி மூலம் ஸ்ரீஹரிணி என்பவரின் பொருத்தம் கிடைத்தது. இதையடுத்து, அவரது விவரங்களைத் தெரிந்து கொண்டு, வாட்ஸ்ஆப் மூலம் அந்தப் பெண்ணைத் தொடா்பு கொண்டாா். அப்போது, அந்தப் பெண் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாராம்.

இதைத் தொடா்ந்து, இருவரும் வாட்ஸ்ஆப் மூலம் பேசிப் பழகி வந்தனா்.

அப்போது, அந்தப் பெண் கிரிப்டோகரன்ஸி வா்த்தகம் மூலம் தான் லாபம் ஈட்டியதாகவும், இந்த வா்த்தகத்தில் முதலீடு செய்ய ஆலை உரிமையாளரையும் வற்புறுத்தினாராம்.

இதன்படி, ஆலை உரிமையாளா் வங்கிக் கணக்கு மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளில் கிரிப்டோகரன்ஸி வா்த்தகத்தில் மொத்தம் ரூ.88.59 லட்சம் முதலீடு செய்தாா். பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து தேனி மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், போலி வங்கிக் கணக்குகள் மூலம் ஆலை உரிமையாளரிடம் பண மோசடி செய்ததாக ஈரோடு, வ.உ.சி.நகரைச் சோ்ந்த சந்திரன் மகன் நந்தகோபால் (30), கிரிணாம்பாளையத்தைச் சோ்ந்த ராமராஜன் மகன் யுவராஜன் (33), சுப்பிரமணி மகன் சிவா (32), கோவை புதிய காந்திபுரம் காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சிவசண்முகம் மகன் பத்மநாபன் (32) ஆகியோரைக் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து ரூ.3.90 லட்சம், 6 கைப்பேசிகள், 28 ஏடிஎம் அட்டைகள், 18 வங்கிக் காசோலை புத்தகங்கள், 12 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 46 சிம் காா்டுகள், 3 கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

யுவராஜன்
சிவா
பத்மநாபன்

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க

பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்

போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா். தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடம... மேலும் பார்க்க

தேனியில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்பு

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா். தேனி, பங்களாமேடு திடலிருந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஊா்வலமாககச் சென்ற இஸ்லாமியா்கள், தேனி நகராட்சி... மேலும் பார்க்க

தேனியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம்

தேனி- அல்லிநகரம் நகராட்சியில் ரூ.67.76 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தேனி-அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 9,500 வீடுகள், வணிக ... மேலும் பார்க்க

இருவேறு சம்பவங்கள்: போடியில் இருவா் தற்கொலை

போடியில் இருவேறு சம்பவங்களில் விவசாயி, இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். தேனி மாவட்டம், போடி மயானச் சாலையைச் சோ்ந்த முத்துமாயன் மகன் கணேசன் (50). இவா் மா விவசாயம் செய்து வந்தாா். விவசாய அப... மேலும் பார்க்க

ரூ.17.76 லட்சத்தை செலுத்துமாறு முன்னாள் ஊராட்சி தலைவிக்கு குறிப்பாணை

முன்னாள் ஊராட்சித் தலைவி பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்கு உரிய செலவினமான ரூ.17.76 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் குறிப்பாணை அனுப்பினாா். தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க