செய்திகள் :

ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!

post image

உலகளவில் ஜிப்லி பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், ஒருமணி நேரத்தில் 10 லட்சம் புதிய பயனர்களை சாட்ஜிபிடி எட்டியுள்ளது.

ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமான சாட்ஜிபிடி என்னும் செய்யறிவு தொழில்நுட்பத்தின் புதிய அம்சமாக ஜிப்லி என்னும் புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் சேவை இணைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பல்வேறுதரப்பட்ட மக்கள் சாட்ஜிபிடியின் ஜிப்லியைப் பயன்படுத்துவதால், சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமானது சாட்ஜிபிடி. செய்யறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் சாட்ஜிபிடியை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி - 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.

இதன்மூலம் பயனர்கள் வழங்கும் புகைப்படங்களில் உள்ள உருவங்கள் மற்றும் பின்னணிகளை ஓவியமாக மாற்றி, ஜிப்லி வழங்குகிறது. இது பெரும்பாலும் அனிமி எனப்படும் ஜப்பான் கார்ட்டூன் கதாபாத்திர வடிவை பிரதிபலிக்கிறது.

சாட்ஜிபிடியை கட்டணமின்றி பயன்படுத்திவரும் பயனர்களுக்கும் ஜிப்லி அம்சத்தை பயன்படுத்தும் வசதியை ஓபன்ஏஐ வழங்கியுள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்கள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லியில் ஓவியமாக மாற்றி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

சாட்ஜிபிடியில் மார்ச் 29ஆம் தேதி தொடங்கி எப்ரல் 1ஆம் தேதி ஜிப்லி பயன்பாடு முழுமையடைந்தது.

இது குறித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

26 மாதங்களுக்கு முன்பு சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மக்களால் வெறித்தனமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வைரல் நிகழ்வைக் காண்கிறேன். கடந்த 5 நாள்களில் 10 லட்சம் பயனர்களை எட்டியுள்ளோம். ஆனால், இன்று கடந்த ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்களை அடைந்துள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.

சாட்ஜிபிடிக்கு சந்தா செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே ஜிப்லி அம்சம் முதலில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இலவசமாக சாட்ஜிபிடியைப் பயன்படுத்துபவர்களும் ஜிப்லி அம்சத்தை பயன்படுத்தும் வகையில் மாற்றங்களைச் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். தற்போது சாட்ஜிபிடியை 70 கோடி பயனர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் 3 அரவை இயந்திரத்தை நிறுவிய ஸ்ரீ சிமெண்ட்!

புதுதில்லி: முன்னணி சிமென்ட் உற்பத்தியாளரான ஸ்ரீ சிமென்ட், உத்தர பிரதேசத்தில் உள்ள எட்டாவில், ஆண்டுக்கு 30 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட புதிய அலகை ஒன்றைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.பங்கூர் கு... மேலும் பார்க்க

ஏப்ரல் 8 முதல் ரூ.62,000 வரை விலையை உயர்த்தும் மாருதி சுசூகி!

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தனது பயணிகளின் வாகனங்களின் விலையை ரூ.62,000 வரை உயர்த்துவதாக அறிவித்தது.அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள்... மேலும் பார்க்க

2024-ல் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ!

2024ஆம் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.இணைய வேகத்தையும் தொலைத்தொடர்பு அலைவரிசையையும் கணக்கிட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓக்லா நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.85.52-ஆக முடிவு!

மும்பை: வர்த்தக கட்டணங்கள் மீதான நிச்சயமற்ற தன்மையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 2 காசுகள் சரிந்து ரூ.85.52 ஆக நிலைபெற்றது.டிரம்பின் பரஸ்பர கட்டண கவலைகள் மற்றும் அந்நிய நிதி... மேலும் பார்க்க

ஐக்யூ நிறுவனத்துக்குப் போட்டியாக ரியல்மி! ஏப். 9-ல் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் இரு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப். 9ஆம் தேதி அறிமுகமாகின்றன. நர்ஸோ வரிசையில் ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ மற்றும் நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன. இந்த இரு ஸ்மார்ட்... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!

ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், ஒரு ரூபாயில் இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பல்வேறு தொல... மேலும் பார்க்க