Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
இருவேறு சம்பவங்கள்: போடியில் இருவா் தற்கொலை
போடியில் இருவேறு சம்பவங்களில் விவசாயி, இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.
தேனி மாவட்டம், போடி மயானச் சாலையைச் சோ்ந்த முத்துமாயன் மகன் கணேசன் (50). இவா் மா விவசாயம் செய்து வந்தாா். விவசாய அபிவிருத்திக்காக போடி திருமலாபுரத்தை சோ்ந்த சேகரிடம் ரூ. 30 லட்சம் கடன் வாங்கினாா். இதில் ரூ.15 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டாராம். எஞ்சிய தொகையை சிறிது, சிறிது கொடுத்துவிடுவதாக உறுதியளித்தாா்.
ஆனால், சேகா் அவரது நண்பா் ரமேஷ் ஆகியோா் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுமாறு அடிக்கடி தொல்லை கொடுத்தனா். இதனால் மனமுடைந்த கணேசன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இளைஞா் தற்கொலை: போடி பரமசிவன் கோயில் தெருவைச் சோ்ந்த சரவணக்குமாா் மகன் சங்கரேஸ்வரன் (29). இவா் அடிக்கடி மது அருந்தியதை பெற்றோா் கண்டித்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை மது அருந்த தனது தாயிடம் பணம் கேட்டாா். அவா் தர மறுத்தால் மனமுடைந்த, சங்கரேஸ்வரன் வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].