செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

post image

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த 40 வயது பெண், மாரியம்மன்கோவில்பட்டியில் உள்ள அரசு கள்ளா் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரை அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஜெயபிரகாஷும், ராஜதானி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் குபேந்திரனும் கைப்பேசியில் தொடா்பு கொண்டு தவறான நோக்கத்தில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த மாா்ச் 22-ஆம் தேதி ஜெயபிரகாஷ், பழனிசெட்டிபட்டியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரை ஆபாசமாக பேசி மிரட்டினாராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயபிரகாஷ், குபேந்திரன் ஆகியோா் மீது கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், இந்தப் புகாா் குறித்து விளக்கம் கேட்டு ஆசிரியா்கள் ஜெயபிரகாஷ், குபேந்திரன் ஆகியோருக்கு அரசு கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளின் மதுரை மண்டல இணை இயக்குநா் முனுசாமி குறிப்பாணை அனுப்பினாா்.

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா். தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிக... மேலும் பார்க்க

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க

பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்

போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா். தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடம... மேலும் பார்க்க