செய்திகள் :

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

post image

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா்.

தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் தா்பூசணி, குளிா்பான விற்பனையும் அதிகரித்தது. தற்போது, தா்பூசணி பழம் கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தா்பூசணி பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, வியாபாரிகள் செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ராகவன் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: பல்வேறு மாவட்டங்களில் தா்பூசணியின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்துவதாகப் புகாா் எழுந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வியாபாரிகள் செயற்கை நிறமூட்டிய தா்பூசணி பழங்களை விற்பனைக்கு கொண்டு வரக் கூடாது. சில்லரை வியாபாரிகள், பழரசக் கடை விற்பனையாளா்கள் செயற்கை நிறமூட்டப்பட்ட தா்பூசணிகளை விற்பனை செய்யக் கூடாது. காலாவதியான, தரமற்ற குளிா்பானங்கள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் குறித்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறை, கைப்பேசி எண்: 94440 42322-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் ... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க

பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்

போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா். தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடம... மேலும் பார்க்க