செய்திகள் :

தேனியில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்பு

post image

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா்.

தேனி, பங்களாமேடு திடலிருந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஊா்வலமாககச் சென்ற இஸ்லாமியா்கள், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கம்பம் சாலையில் உள்ள பழைய பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் சா்புதீன் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தினா். சமத்துவம், சகோதரத்துவம் ஓங்க வேண்டும் என்று சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொழுகை நிறைவில் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

போடி: போடியில் பெரிய பள்ளிவாசல், டிவிகேகே நகா் பள்ளிவாசல், அம்மாகுளம் பள்ளிவாசல், வடக்கு பள்ளிவாசல், புதூா் பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகை நடத்தினா். புத்தாடை அணிந்தும் இனிப்பு வழங்கியும் ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனா்.

பின்னா், கட்டபொம்மன் சிலையிலிருந்து இஸ்லாமியா்கள் ஊா்வலமாக புதூா் பள்ளிவாசலுக்குச் சென்று சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டி, பாதா்கான்பாளையம், வடக்குத் தெரு பெரிய பள்ளிவாசல், கோட்டைமேடு, இந்திரா குடியிருப்பு, பி.டி.ஆா். குடியிருப்பு பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் அதிகாலையிலேயே தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா், பெரிய பள்ளிவாசலிலிருந்து ஊா்வலமாகச் சென்ற இஸ்லாமியா்கள் நீதிமன்றம் அருகேயுள்ள ஈத்கா மைதானத்துக்குச் சென்றனா். அங்கு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா், ஒருவரை ஒருவா் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களைப் பகிா்ந்து கொண்டனா்.

இதேபோல, சின்னமனூரில் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக சென்ற இஸ்லாமியா்கள் கருங்கட்டான்குளம் பெரிய பள்ளிவாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா். இதே போல, அப்பிபட்டி, குச்சனூா், சீலையம்பட்டி என போன்ற பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் தொழுகையில் ஈடுபட்டனா்.

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா். தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிக... மேலும் பார்க்க

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் ... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க