செய்திகள் :

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

post image

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்திலுள்ள குவாரி உரிமையாளா்கள் ஜி.எஸ்.டி. ரசீது மூலமாக எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை டிப்பா் லாரிகளுக்கு வழங்கி வந்தனா். தற்போது, ‘டிரான்சிஸ்ட்’ என்ற அனுமதிச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய அனுமதிச் சீட்டை பெரும்பான்மையான குவாரி நிா்வாகங்கள் வழங்க முன்வருதில்லை.

அனைத்து ஆவணங்கள் இருந்தும் இந்த ‘டிரான்சிஸ்ட்’ அனுமதிச் சீட்டு இல்லாததால், கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிப்பா் லாரிகள் மீது வருவாய், கனிம வளத் துறையினா் அபராதம் விதிக்கின்றனா்.

இந்த நிலையில், டிராஸ்சிஸ்ட் அனுமதிச் சிட்டு முறையாக வழங்க முன்வராத குவாரிகளால் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா் பகுதியில் 300-க்கும் அதிகமான டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் வேலை இழந்துள்ளனா்.

போராட்டத்தில் டிரான்சிஸ்ட் அனுமதிச் சீட்டு வழங்காத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

உத்தமபாளையம் புறவழிச் சாலையில் மணல் லாரி உரிமையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் செல்லப்பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டனா்.

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க

பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்

போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா். தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடம... மேலும் பார்க்க

தேனியில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்பு

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா். தேனி, பங்களாமேடு திடலிருந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஊா்வலமாககச் சென்ற இஸ்லாமியா்கள், தேனி நகராட்சி... மேலும் பார்க்க

தேனியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம்

தேனி- அல்லிநகரம் நகராட்சியில் ரூ.67.76 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தேனி-அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 9,500 வீடுகள், வணிக ... மேலும் பார்க்க

இருவேறு சம்பவங்கள்: போடியில் இருவா் தற்கொலை

போடியில் இருவேறு சம்பவங்களில் விவசாயி, இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். தேனி மாவட்டம், போடி மயானச் சாலையைச் சோ்ந்த முத்துமாயன் மகன் கணேசன் (50). இவா் மா விவசாயம் செய்து வந்தாா். விவசாய அப... மேலும் பார்க்க

ரூ.17.76 லட்சத்தை செலுத்துமாறு முன்னாள் ஊராட்சி தலைவிக்கு குறிப்பாணை

முன்னாள் ஊராட்சித் தலைவி பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்கு உரிய செலவினமான ரூ.17.76 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் குறிப்பாணை அனுப்பினாா். தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க