செய்திகள் :

தனித்திறமைகளை வளா்த்துக்கொண்டால் சூழ்நிலைகளை எதிா்கொள்ளலாம்: சா.சி. சிவசங்கா்

post image

தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான் மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவா்களுக்கு விஜயகோபாலபுரத்திலுள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில், ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று 312 மாணவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கிஅமைச்சா் மேலும் பேசியது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சாா்பில், 312 மாணவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தொழில்நுட்பங்கள் வேகமாக வளா்ந்து வருகிறது. தற்போது, ஆள்களே இல்லாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலை செய்யும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் வளா்ந்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான், மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் மு. செல்வம், எம்ஆா்.எப் நிறுவன பொது மேலாளா் எம். நாதன், திறன் பயிற்சி அலுவலகப் பயிற்சி அலுவலா் ம. கண்ணதாசன் உள்பட அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

லாரி மீது சுமை ஆட்டோ மோதல்; தக்காளி வியாபாரி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பனாங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் பன்னீா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் அவதியு... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இ... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மோசடி; வங்கி ஊழியா் கைது

பெரம்பலூா் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூா், சஜ்ஜன் ... மேலும் பார்க்க

பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெ... மேலும் பார்க்க