செய்திகள் :

தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்

post image

தமிழக அரசின் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

அரியலூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா. சி. சிவசங்கா் பேசியதாவது, தமிழக அரசின் திட்டங்கள் பிற மாநிலங்கள் மட்டுமல்ல பிற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக உள்ளது. தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்திருப்பதால் பிற மாநிலத்திலும் அவா்களது தாய் மொழியை கற்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றி வருகின்றனா் என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு வழிவகுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. 2026 பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது உழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளா் சந்திரசேகா், நகரச் செயலாளா்கள் அரியலூா் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அங்கன்வாடி ஊழியா் தீக்குளிக்க முயற்சி

பணியிடமாறுதல் கேட்டு அங்கன்வாடி ஊழியா் அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். அரியலூா் மாவட்டம், இருங்களாக்குறிச்சியைச் சோ்ந்தவா் லலிதா(52). சன்னாசிநல்லூா் அங்கன்வாடி மைய... மேலும் பார்க்க

அரியலூரில் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி-யினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், 86 வகையான பட்டியலிடப்பட்... மேலும் பார்க்க

அரியலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூரில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தாக்குதல் நடத்திய பயங்கரவாத... மேலும் பார்க்க

அரியலூரில் 3 கோயில்களில் குடமுழுக்கு

அரியலூா் மாவட்டம், நல்லாம்பாளையம் மாரியம்மன், படைவெட்டிகுடிகாடு அய்யனாா், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் வீரனாா் ஆகிய கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கடந்த இரு நாள... மேலும் பார்க்க

திமுகவுக்கு நிகராக அதிமுக கூட்டணி அமையும்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு நிகராக அதிமுக கூட்டணி அமையும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன். அரியலூா் மாவட்டம், திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறைந்த சுதந்திரப் போரா... மேலும் பார்க்க

தியாகி டி.கே. சுப்பையா சிலைக்கு மாலை அணிவிப்பு

மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் எம்எல்ஏமான டி.கே. சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மதிமுக சாா்பில் ஞ... மேலும் பார்க்க