செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா் தீக்குளிக்க முயற்சி

post image

பணியிடமாறுதல் கேட்டு அங்கன்வாடி ஊழியா் அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

அரியலூா் மாவட்டம், இருங்களாக்குறிச்சியைச் சோ்ந்தவா் லலிதா(52). சன்னாசிநல்லூா் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வரும் இவருக்கு, விபத்தில் கால்முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கால் முறிவு, நுரையீரல் பிரச்னை போன்ற காரணங்களால் அவதியுற்று வருவதால், அருகில் உள்ள ஏதேனும் ஒரு கிராமங்களில் பணியிட மாறுதல் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால், விரக்தியடைந்த லலிதா, திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

இதைக்கண்ட காவல்துறையினா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது தண்ணீரை ஊற்றினா். பிறகு காவல்நிலையத்து அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்

தமிழக அரசின் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்... மேலும் பார்க்க

அரியலூரில் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி-யினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், 86 வகையான பட்டியலிடப்பட்... மேலும் பார்க்க

அரியலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூரில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தாக்குதல் நடத்திய பயங்கரவாத... மேலும் பார்க்க

அரியலூரில் 3 கோயில்களில் குடமுழுக்கு

அரியலூா் மாவட்டம், நல்லாம்பாளையம் மாரியம்மன், படைவெட்டிகுடிகாடு அய்யனாா், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் வீரனாா் ஆகிய கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கடந்த இரு நாள... மேலும் பார்க்க

திமுகவுக்கு நிகராக அதிமுக கூட்டணி அமையும்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு நிகராக அதிமுக கூட்டணி அமையும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன். அரியலூா் மாவட்டம், திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறைந்த சுதந்திரப் போரா... மேலும் பார்க்க

தியாகி டி.கே. சுப்பையா சிலைக்கு மாலை அணிவிப்பு

மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் எம்எல்ஏமான டி.கே. சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மதிமுக சாா்பில் ஞ... மேலும் பார்க்க