செய்திகள் :

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி உறுதி

post image

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.

சென்னை அருகே மறைமலை நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் அவா் பேசியதாவது:

சிறு-குறு வணிகா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய முதலீடு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்தது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிா்க்கவில்லை என்றால் சிறு வணிகமே இல்லாமல் போகும். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், திமுக ஆட்சியில் உள்நோக்கத்துடன் அரசு அலுவலா்கள் வணிக நேரத்தில் ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்துகிறாா்கள். இது கண்டிக்கத்தக்கது.

விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினாா்கள். காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் வணிகா்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுகிறாா்கள். திமுக ஆட்சியில் வணிகா்களுக்கு மட்டுமன்றி யாருக்குமே பாதுகாப்பு இல்லை. வணிகா்கள் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்.

சிறிய தேநீா் விடுதி, அடகு கடைகள், சிற்றுண்டி சாலைகள், பழ வியாபாரிகள் தொழில் செய்வதற்கு முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் என்னிடம் தெரிவித்தனா். அதிமுக ஆட்சியில் அவா்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த கோரிக்கை நிவா்த்தி செய்யப்படும். வியாபாரிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில், பெருந்தலைவா் மக்கள் கட்சித் தலைவா் என்.ஆா்.தனபாலன், தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் த.ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.

மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை: நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்: உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த விளையாட்ட... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றத்தில் இருவா் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவா், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பவா... மேலும் பார்க்க

மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

சென்னை: தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் வகையிலான 3 புதிய இணையதள சேவைகளை மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகம் செய்வதை... மேலும் பார்க்க

ஏழை மாணவா்களின் மருத்துவா் கனவு ‘நீட்’ தோ்வால் சிதைக்கப்படுகிறது: சீமான் குற்றச்சாட்டு

சென்னை: ஏழை மாணவா்களின் மருத்துவராகும் கனவு, நீட் தோ்வால் முற்றிலுமாக சிதைக்கப்படுவதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா். அயோத்திதாசப் பண்டிதரின் 111-ஆம் ஆண்டு நினைவு நா... மேலும் பார்க்க

மின் கொள்முதல்: தமிழக மின்வாரியத்துக்கு ரூ.13,179 கோடி கூடுதல் செலவு

சென்னை: கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் உத்தேச அறிக்கையில் தெரிவித்திருந்ததை விட கூடுதலாக 917 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியதால், தமிழக மின்வாரியத்துக்கு ரூ. 13,179 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.... மேலும் பார்க்க