செய்திகள் :

ஏழை மாணவா்களின் மருத்துவா் கனவு ‘நீட்’ தோ்வால் சிதைக்கப்படுகிறது: சீமான் குற்றச்சாட்டு

post image

சென்னை: ஏழை மாணவா்களின் மருத்துவராகும் கனவு, நீட் தோ்வால் முற்றிலுமாக சிதைக்கப்படுவதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

அயோத்திதாசப் பண்டிதரின் 111-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சீமான் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்படுகிறது; ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இவ்வளவு கெடுபிடிகள் உள்ளன. மாணவிகளின் துப்பட்டாவை அகற்றுவது, தாலி, மூக்குத்தி போன்றவற்றை கழற்றிய பின்னரே தோ்வு மையங்களுக்குள் அனுமதிப்பது போன்ற கொடுமையான செயல்கள் நடைபெறுகின்றன. தோ்வு எழுதுவதற்கு முன்பே மாணவா்களை இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக்கினால் அவா்களால் எப்படி சரியாக தோ்வு எழுத முடியும்?

பெண்களின் மூக்குத்தியில் தொழில்நுட்பங்களை பொருத்தி, தோ்வுகளில் முறைகேடுகள் செய்ய முடியும் என நம்மை நம்ப வைக்கும் அதே அரசாங்கம், இவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் எந்த முறைகேடுகளையும் செய்ய முடியாது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. தனியாா் பயிற்சி மையங்கள் லாபம் சம்பாதிக்கவே நீட் தோ்வு நடத்தப்படுகிறது. நீட் தோ்வால், ஏழை மாணவா்களின் மருத்துவராகும் கனவு முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது என்றாா் சீமான்.

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்பியுமான வைகோ, வீட்டில் தவறிவிழுந்ததில் கை விரலில் காயம் ஏற்... மேலும் பார்க்க

மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை: நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை அருகே மறைமலை நகரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்: உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த விளையாட்ட... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றத்தில் இருவா் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவா், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பவா... மேலும் பார்க்க

மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

சென்னை: தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் வகையிலான 3 புதிய இணையதள சேவைகளை மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகம் செய்வதை... மேலும் பார்க்க