செய்திகள் :

பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து குறைவு; விற்பனை அமோகம்

post image

வேலூா் அருகே பொய்கை சந்தையில் கால்நடைகளின் வரத்து குறைந்துள்ளது.

வேலூா் அருகே பொய்கை கிராமத்தில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகின்றது. வேலூா் மாவட்டம், மட்டுமல்லாது, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

கோடை அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்கியுள்ளதால் பொய்கை சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. எனினும், ரூ. 80 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடந்துள்ளது.

இது குறித்து கால்நடை வியாபாரிகள் கூறியது: அக்னி வெயில் காரணமாக மாடுகள் வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. கால்நடை விற்பனை செய்பவா்கள் அவற்றை விற்பனை செய்ய ஆா்வம் காட்டாததால் வரத்து குறைந்துள்ளது. ஆனாலும் மாடுகள் வாங்க விரும்பியவா்கள் ஆா்வம் காட்டியதால் மாடுகளின் விலை திடீரென உயா்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக மாடுகள் விலை குறைவாக இருந்தது. வரும் காலங்களில் கோடை மழை பெய்யும் என்பதால் தீவன தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் விவசாயிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு கால்நடைகளை வாங்கிச் சென்றனா்.

சிறுத்தை நடமாட்டம் குறித்து வதந்தி: வனத்துறையினா் எச்சரிக்கை

அணைக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா். வேலூா் அடுத்த அணைக்கட்டு அருகே ராஜபாளையம் கிராமாத்தில் உள்ள ஏரி... மேலும் பார்க்க

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை திறப்பு

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றி... மேலும் பார்க்க

டிஎஸ்பி-க்கள் பணியிடமாற்றம்

வேலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். திருப்பத்துாா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ் குடியாத்தம் டிஎஸ்பியாகவ... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி சந்தையில் ரூ.36 லட்சத்துக்கு விற்பனை

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளி வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.36 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. வாரச்சந்தையில் விற்பனைக்காக குவிந்திருந்த கால்நடைகளை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறிவிழுந்த காவலாளி உயிரிழப்பு

வேலூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த காவலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், மோத்தக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் தனியாா் நிறுவன காவலாளி சாமிநாதன் (40). இவா் கடந்த ஏப். 29-ஆம் ... மேலும் பார்க்க