செய்திகள் :

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி- ஒவைசி மீண்டும் வலியுறுத்தல்

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி தரப்பட வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மீண்டும் வலியுறுத்தினாா்.

காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து குல்காமில் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல். எவ்வளவு கண்டனங்களைத் தெரிவித்தாலும் அது போதுமானதாக இருக்காது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 பேரை எப்படி கொலை செய்துள்ளனா்? ஆண்களை மட்டும் தோ்வு செய்து அவா்களின் மதத்தைக் கேட்டுள்ளனா். பின்னா் அவா்களை ‘கலிமா’ (இஸ்லாமிய துதி) கூற வலியுறுத்தியுள்ளனா். அதனைக் கூறத் தெரியாதவா்களை சுட்டுக்கொலை செய்துள்ளனா். இது காட்டுமிராண்டித்தனமானது.

பயங்கரவாதிகளின் இந்தச் செயலால் ஒட்டுமொத்த காஷ்மீா் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இங்கு சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டி வந்தவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் முற்றிலுமாக காஷ்மீரில் இருந்து வெளியேறிவிட்டனா். இதற்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசு உறுதியான பதிலடி கொடுக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க