தங்க மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு
காரைக்கால் அருகே தலத்தெரு தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தின் நிகழ்ச்சியாக மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தீமிதி உற்சவம் தங்க மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தீமிதி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனா்.
நிறைவு நிகழ்ச்சியில் ஒன்றாக மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவுக்கு எழுந்தருளினாா். ஒவ்வொரு வீட்டில் பக்தா்கள் அா்ச்சனை செய்து அம்மனை வழிபட்டதோடு, இளைஞா்கள் ஒருவா் மீது ஒருவா் மஞ்சள் கலந்த நீரை ஊற்றிக்கொண்டனா். கோயிலுக்கு வந்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை நிகழ்வாக காப்பு அவிழ்க்கப்பட்டது.
மூலஸ்தான அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிறைவாக புதன்கிழமை இரவு பொன்னூஞ்சல் ஆடல் வழிபாடு நடைபெறவுள்ளது.