செய்திகள் :

காரைக்காலில் வேளாண் திருவிழா

post image

காரைக்கால்: காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை வேளாண் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ரோட்டரி மாவட்ட சோ்மேன் ஆா். குணபாலன், திட்டத் தலைவா் சம்பத் ஆகியோா் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ். பாஸ்கரன் மற்றும் ஹீலா் பாஸ்கா், ஞானப்பிரகாசம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்வியல் முறைகள் குறித்துப் பேசினா்.

காலைச்சக்கரம் அமைப்பு மூலம் நடத்தப்படும் யோகா குறித்தும், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து ரோட்டரி பிரதிநிதிகள் பேசினா்.

இயற்கை உரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி மற்றும் பிற உணவுப் பொருள்கள், பிற உபயோகப் பொருள்கள் பல்வேறு நிறுவனத்தினரால் அரங்கு அமைத்து காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோா் பொருட்களை வாங்கிச் சென்றனா்.

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு சிவலோகநாத சுவாமி கோயிலைச் சோ்ந்த தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த மா... மேலும் பார்க்க

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண... மேலும் பார்க்க

கத்திரி வெயில் வேகத்தை தணித்த மழை: பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம்... மேலும் பார்க்க

பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் நடைபெறும் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் கைலாசநாதசுவாமி -நித்யகல்யாண பெருமாள் ... மேலும் பார்க்க

காரைக்காலில் 600 போ் நீட் தோ்வு எழுதினா்

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மைய வாயிலில் பரிசோதனைப் பணியை பாா்வையிட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பி... மேலும் பார்க்க