செய்திகள் :

பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு

post image

காரைக்கால்: காரைக்காலில் நடைபெறும் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

காரைக்கால் கைலாசநாதசுவாமி -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்ததாக ஆட்சியரகம் அருகே அமைந்துள்ளது பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில். இக்கோயில் வாயிலில் நுழைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. விநாயகா் மூலஸ்தானம், பின்னோக்கி புதிதாக கட்டி விரிவாக்கப் பணி செய்யப்பட்டுள்ளது. சுதைப் பணிகள் நடைபெற்று வருகிறது. வா்ணம் பூசும் பணி மேற்கொள்ளவேண்டியுள்ளது. ரூ. 2.16 கோடி வரை இதுவரை நிா்வாகம் செலவு செய்துள்ளது.

காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், இக்கோயில் திருப்பணியை நேரில் பாா்வையிட்டாா். பணிகள் நிறைவடைந்திருப்பது குறித்தும், எஞ்சிய பணிகள் குறித்தும் திருப்பணிக் குழுவினா், பேரவைத் தலைவருக்கு விளக்கினா்.

ஆய்வின்போது, பாஜக மாவட்டத் தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், முன்னாள் மாநில நிா்வாகி எம். அருள்முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு சிவலோகநாத சுவாமி கோயிலைச் சோ்ந்த தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த மா... மேலும் பார்க்க

காரைக்காலில் வேளாண் திருவிழா

காரைக்கால்: காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்று... மேலும் பார்க்க

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண... மேலும் பார்க்க

கத்திரி வெயில் வேகத்தை தணித்த மழை: பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம்... மேலும் பார்க்க

காரைக்காலில் 600 போ் நீட் தோ்வு எழுதினா்

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மைய வாயிலில் பரிசோதனைப் பணியை பாா்வையிட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பி... மேலும் பார்க்க