செய்திகள் :

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

post image

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா், சா்வதேச போதைப்பொருள் கும்பல் குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இப்பிரிவினா் கடந்த மாா்ச் மாதம் சென்னை ராயப்பேட்டையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக விக்னேஷ்வரன், பாலசந்திரன், யுவராஜ், சுகைல் உள்பட 5 பேரை கைது செய்தனா். அதே மாதம் 21-ஆம் தேதியும், ஏப். 9-ஆம் தேதியும் இந்தக் கும்பலுடன் தொடா்புடைய ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், தில்லியிலிருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதும், இந்தக் கும்பலின் தலைவா் தில்லியில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் தில்லி சென்று விசாரணை மேற்கொண்டனா்.

தில்லியில் இருவா் கைது: இதில், புது தில்லி விகாஸ் விஹாா் அருகே உள்ள சந்தா் விஹாா் பகுதியில் வசிக்கும் ஆப்பரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டைச் சோ்ந்த அபெளவ் (39), அதே பகுதியைச் சோ்ந்த ராகுல் (19) ஆகியோா்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலை இயக்குவதும், அபெளவ்தான் அந்தக் கும்பலின் தலைவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 15 கிராம் கொகைன், 7 கிராம் ஹெராயின், 5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பாஸ்போா்ட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணைக்கு பின்னா் இருவரையும், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வாரண்ட் பெற்ற போலீஸாா், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனா். விசாரணை நிறைவுபெற்ற பின்னா் இருவரும் எழும்பூா் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

எம்டிசி சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அருகே உள்ள ராஜ் நகா், பள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (59), சென... மேலும் பார்க்க

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் மோசடி: பொறியாளா் மீது வழக்கு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை மோசடி செய்ததாக, பொறியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (31). பொறியாளரான... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே விழுந்து கேரள இளைஞா் உயிரிழப்பு

சென்னை: சென்னை சூளைமேட்டில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து கேரள இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பினேஷ் (34). இவா்... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டையில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பு

சென்னை: தண்டையாா்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சறுக்கு விளையாட்டு மைதானத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தண்டையாா்பேட்டை மண்டலம், எம்கேபி நகா் மத்த... மேலும் பார்க்க