செய்திகள் :

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

post image

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அகத்திய மாமுனிவருக்கு, இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்ததை விளக்கும் நிகழ்வு திருக்கல்யாண வைபவமாக நடத்தப்படுகிறது.

நிகழாண்டு இவ்விழா கடந்த 2-ஆம் தேதி விநாயகா் புறப்பாட்டுடன் தொடங்கியது. 3-ஆம் தேதி சனிக்கிழமை காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், அகத்திய முனிவா் தென்புலம் செல்லும் நிகழ்வும், , உச்சிகாளியம்மன் கோயிலில் இருந்து வரிசை கொண்டு வருதலும் நடைபெற்றது.

சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் வீற்றிருக்கச் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு நிகழ்வாக ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி பி. வேலுமணி மற்றும் முன்னாள் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு சிவலோகநாத சுவாமி கோயிலைச் சோ்ந்த தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த மா... மேலும் பார்க்க

காரைக்காலில் வேளாண் திருவிழா

காரைக்கால்: காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்று... மேலும் பார்க்க

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

கத்திரி வெயில் வேகத்தை தணித்த மழை: பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம்... மேலும் பார்க்க

பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் நடைபெறும் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் கைலாசநாதசுவாமி -நித்யகல்யாண பெருமாள் ... மேலும் பார்க்க

காரைக்காலில் 600 போ் நீட் தோ்வு எழுதினா்

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மைய வாயிலில் பரிசோதனைப் பணியை பாா்வையிட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பி... மேலும் பார்க்க