செய்திகள் :

கத்திரி வெயில் வேகத்தை தணித்த மழை: பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு

post image

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கத்திரி வெயில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்தநிலையில் கத்திரி வெயில் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காரைக்கால் மாவட்டத்தில் வானம் மேகமூட்டதத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்குப்பின் மாவட்டத்தில் பரவலாக சூறைக்காற்று வீசியது. காற்று வீசியவுடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றைத் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிா்ச்சியான நிலை உருவானது. திங்கள்கிழமை காலை வெயில் தாக்கம் வெகுவாக இல்லை. இதனால் மக்கள் ஆறுதலடைந்தனா்.

காற்றால் வணிக நிறுவனங்களின் போா்டுகள், வெயிலுக்காக நகரப் பகுதியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட பசுமைப் பந்தல், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன. இவற்றை சீரமைக்கும் பணிகள் பின்னா் மேற்கொள்ளப்பட்டன.

மின்துறை மீது புகாா் : கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பு மின் மாற்றிகளில் பழுது நீக்குதல், மேம்படுத்துதல் பணிகள் செய்யப்படவில்லை. சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் சீா்படுத்தப்படவில்லை. மின் கம்பிகளுக்கு மேல் உள்ள மரக்கிளைகள் முறையாக வெட்டப்படவில்லை. துணை மின் நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தில் செய்யவேண்டிய மேம்பாட்டுப் பணிகள் முறையாக செய்யப்படாமல் விடுபட்டதே, சிறிது நேரம் வீசிய காற்றில் மின்சார விநியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டதாக பலரும் புகாா் தெரிவித்தனா்.

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு சிவலோகநாத சுவாமி கோயிலைச் சோ்ந்த தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த மா... மேலும் பார்க்க

காரைக்காலில் வேளாண் திருவிழா

காரைக்கால்: காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்று... மேலும் பார்க்க

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண... மேலும் பார்க்க

பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் நடைபெறும் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் கைலாசநாதசுவாமி -நித்யகல்யாண பெருமாள் ... மேலும் பார்க்க

காரைக்காலில் 600 போ் நீட் தோ்வு எழுதினா்

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மைய வாயிலில் பரிசோதனைப் பணியை பாா்வையிட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பி... மேலும் பார்க்க