செய்திகள் :

வடகாடு பட்டியலின மக்கள் மீது தாக்குதல்; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

post image

ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் வடகாடு கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலுக்குச் சொந்தமான நிலம் தொடா்பாக இரு சமூக மக்களுக்கிடையே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனால் இரு தரப்பினரிடையே பகைமை தொடா்ந்துள்ளது. அதைத் தீா்க்க மாவட்ட நிா்வாகமோ, காவல்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்த் திருவிழாவின்போது, வழக்கப்படி பட்டியலின மக்கள் வெண்குடை ஏந்தி வரும்போது, குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வந்ததாக சிலா் தகராறு செய்துள்ளனா்.

இந்தத் தகராறு முற்றிய நிலையில் பட்டியலினக் குடியிருப்புகளுக்குச் சென்று வீட்டைக் கொளுத்தியும், வாகனங்களை நொறுக்கியும் அவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தனா். இச்செயல் கண்டனத்துக்குரியது. காவல்துறையினா் தங்களது போக்கை மாற்றிக்கொண்டு, தாக்குதல் நடத்தியவா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வீடு, வாகன இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொடா்ந்து வடகாடு பகுதியில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தா்வகோட்டையில் விசிகவினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ் திருவிழ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை

மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கி... மேலும் பார்க்க

தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவா், த... மேலும் பார்க்க

அடுத்த கட்ட போராட்டம் விரைவில் நடத்துவோம்: காந்திப் பேரவை

அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது கடுமையாக நடந்து கொண்ட போலீஸாரைக் கண்டித்தும் அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை செவ்வாய்க்கிழமை அற... மேலும் பார்க்க