செய்திகள் :

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது, கடைவீதியில் உள்ள கோயில் நுழைவாயில் அருகே இளைஞா்கள் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், அது இரு தரப்பு இளைஞா்களிடையே மோதலாக மாறியுள்ளது. அதில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களில் தாக்கிக்கொண்டதில் இரு தரப்பைச் சோ்ந்த 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்டோா்

காயமடைந்த இருதரப்பைச் சோ்ந்தவா்கள் மீட்கப்பட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனை, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, ஒரு தரப்பினரின் குடிசைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பினா் தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அரசுப் பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடியை சேதப்படித்தினா்.

ஆய்வு செய்த சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி

இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு புதுகை காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். தொடா்ந்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமாா் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து திங்கள்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்துக்கு சென்ற சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தீக்கிரையான வீடு, வாகனங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காயமடைந்து சிகிச்சை பெற்றோா்

இதுதொடா்பாக வடகாடு போலீஸாா் 14 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதனால், புதுகை- பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி இடையே பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கப்படவில்லை. அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வடகாடு பட்டியலின மக்கள் மீது தாக்குதல்; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் விசிகவினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ் திருவிழ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை

மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல... மேலும் பார்க்க

தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவா், த... மேலும் பார்க்க

அடுத்த கட்ட போராட்டம் விரைவில் நடத்துவோம்: காந்திப் பேரவை

அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது கடுமையாக நடந்து கொண்ட போலீஸாரைக் கண்டித்தும் அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை செவ்வாய்க்கிழமை அற... மேலும் பார்க்க