செய்திகள் :

ஜெர்மனி பிரதமராக ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தேர்வு!

post image

பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி, ஜெர்மனியின் பிரதமராக பதவி வகித்த ஓலாஃப் ஷோல்ஸின் ‘சோசியல் டெமாக்கிரட்ஸ்’ கட்சி தோல்வியடைந்தது.

எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் 'கிறிஸ்தவ ஜனநாயக யுனியன் கட்சி சிஎஸ்யு/சிடியு’ ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து, ஜெர்மனியின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஜெர்மன் நாடாளுமன்றத்தில் இன்று(மே 6) நடைபெற்றது.

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் வேட்பாளர் வெற்றி பெற 316 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்தநிலையில், முதல் சுற்று வாக்கெடுப்பில் அவரால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.

ஆனால், அடுத்து சுற்று வாக்கெடுப்பில் அவர் 325 வாக்குகளைப் பெற்று பிரதமராக தேர்வாகியுள்ளார். இதையடுத்து இன்றே ஜெர்மன் பிரதமராக ப்ரைட்ரிச் மெர்ஸ் பதவியேற்கவுள்ளார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் ப்ராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெயெர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதுமாகத் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!

யேமனின் தலைநகரிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவுப் பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கடந்த மே.4 ஆம் தேதியன்று ... மேலும் பார்க்க

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!

ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் தாக்கு... மேலும் பார்க்க

புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான சிக்னல் துண்டிக்கப்படவுள்ளது.நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத... மேலும் பார்க்க

எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!

ஜம்மு - காஷ்மீரில் கிட்டத்தட்ட 200 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லையில் வசிக்கும் விவசாயிகள் அறுவடையை அவசர அவசரமாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.... மேலும் பார்க்க

செனாப் ஆற்றில் நிறுத்தப்பட்ட நீரால் கரீப் சாகுபடி பாதிப்பு: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் சிந்து நதிநீர் வாரியத்தின் ஆலோசனைக் குழுவானது, செனாப் ஆற்றில் நீர்வரத்தை இந்தியா நிறுத்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் கோரிக்கை

மாஸ்கோ: இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்று ரஷியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷிய வெளியுறவ அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷா... மேலும் பார்க்க