செய்திகள் :

எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!

post image

ஜம்மு - காஷ்மீரில் கிட்டத்தட்ட 200 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லையில் வசிக்கும் விவசாயிகள் அறுவடையை அவசர அவசரமாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.25 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாகிஸ்தானின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

ட்ரேவா, மஹாஷே-தே-கோதே, சந்து சக், கரானா, புல்லா சக் மற்றும் கொரோடனா கலன் போன்ற கிராமங்கள் அறுவடையை முடிக்கவும், தானியங்களை உலர்த்தவும், ஆலைகளுக்கு வழங்குவதற்காக இரவு பகலாக உழைத்து பரபரப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

கோதுமை மற்றும் பிற பயிர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை அறுவடை செய்யப்பட்டுவிட்டாலும், மீதமுள்ளவற்றை அறுவடை செய்து அவற்றை ஆலைகளுக்கு அனுப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எல்லைக்கு 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள ட்ரெவா, பாகிஸ்தான் தாக்குதலுக்கு நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதிலிருந்து, ட்ரெவாவில் உள்ள விவசாய சமூகம் பதட்டமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அறுவடை செயல்முறையை விரைவுபடுத்த தாசில்தார் 20 அறுவடை இயந்திரங்களை ஏற்பாடு செய்துள்ளார்.

நாங்கள் ஆபத்து மண்டலத்தில் வாழ்கிறோம். போர் தாக்குதல் தொடங்கும் ஒவ்வொரு முறையும், நாங்கள் மரணத்தையும், அழிவையும் எதிர்கொள்கிறோம் என்று விவசாயி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!

ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் தாக்கு... மேலும் பார்க்க

புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான சிக்னல் துண்டிக்கப்படவுள்ளது.நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத... மேலும் பார்க்க

செனாப் ஆற்றில் நிறுத்தப்பட்ட நீரால் கரீப் சாகுபடி பாதிப்பு: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் சிந்து நதிநீர் வாரியத்தின் ஆலோசனைக் குழுவானது, செனாப் ஆற்றில் நீர்வரத்தை இந்தியா நிறுத்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் கோரிக்கை

மாஸ்கோ: இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்று ரஷியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷிய வெளியுறவ அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷா... மேலும் பார்க்க

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

டெல் அவிவ்: காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அவா்கள் திங்கள்கிழமை கூறியதாவது: இ... மேலும் பார்க்க

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க