செய்திகள் :

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா? கௌதம் கம்பீர் பதில்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதையும் படிக்க: மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி

அணியில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியின் தலைமைப் பயிற்சியாளரின் வேலை அணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதை தேர்வு செய்வது கிடையாது. அது அணித்தேர்வுக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வேலை. பிளேயிங் லெவனில் யார் இடம்பெற வேண்டும் என்பதை மட்டுமே பயிற்சியாளர் முடிவு செய்ய முடியும். எனக்கு முன்பு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக செயல்பட்டவர்கள் யாரும் அணித் தேர்வுக்குழுவில் இல்லை. நானும் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் கிடையாது.

விராட் கோலி, கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நன்றாக விளையாடும் வரை தொடர்ந்து அணியில் இருப்பார்கள். வீரர் ஒருவர் தனது கிரிக்கெட் பயணத்தை எப்போது தொடங்க வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட தனிநபரின் முடிவே. எந்த ஒரு பயிற்சியாளரும், தேர்வுக்குழு உறுப்பினரும், பிசிசிஐயும் வீரர் ஒருவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை கூற முடியாது. வீரர் ஒருவர் நன்றாக விளையாடினால், 40 அல்ல 45 வயது வரை கூட விளையாடலாம். யார் தடுக்கப் போகிறார்கள்?

இதையும் படிக்க: அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை: டேனியல் வெட்டோரி

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவது அவர்கள் விளையாடும் விதத்தை பொருத்தே முடிவு செய்யப்படும். அவர்களது சிறப்பான செயல்பாடுகளே 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இடம்பெறுவார்களா என்பதை உறுதி செய்யும். அவர்கள் இருவரது செயல்பாடுகள் குறித்து நான் என்ன சொல்வது? அவர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய விதத்தை இந்த உலகம் பார்த்தது என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியை விட அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கோமாளிகள்..! கொந்தளித்த பாடகர்!

ஹிந்தி பாடகர் விராட் கோலி, அவரது ரசிகர்கள் குறித்து கூறியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிவரும் கோலி அவ்வபோது சமூக வலைதளங்களிலும் எதாவது விளம்பரங்களுக்காகப... மேலும் பார்க்க

எப்போதும் உன்னுடன் இருப்பேன்: மனைவி பிறந்தநாளில் பும்ரா நெகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது மனைவி பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013ஆம் ஆண்டு அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவுக்கு 2018-இல் விளையாடத் ... மேலும் பார்க்க

முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் வைர மோதிரம் அணிவித்த ரோஹித் சர்மா!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வைர மோதிரத்தை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியனி... மேலும் பார்க்க

இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது; ரபாடா விவகாரத்தில் முன்னாள் ஆஸி. கேப்டன் காட்டம்!

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ககிசோ ரபாடாவுக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் பேசியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணியின... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஒருநாள், டி20-களில் இந்தியா ஆதிக்கம்; டெஸ்ட்டில் சறுக்கல்!

ஐசிசி ஆடவர் அணிகளுக்கான தரவரிசையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்து அசத்தியுள்ளது.ஐசிசியின் ஆடவர் அணிகளுக்கான தரவரிசையினை ஐசிசி இன்று (மே 5) வெளியிட்டது. அதில், ஒருநா... மேலும் பார்க்க

23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இளம் நடிகை அவ்னீத் கௌர் புகைப்பட சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். சமூக ஊடகத்தில் நேற்று (மே.2) விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) ந... மேலும் பார்க்க