படப்பிடிப்பில் காயம், அடுத்த காட்சிக்கு உடனே தயாரான நானி! இயக்குநர் நெகிழ்ச்சி!
எப்போதும் உன்னுடன் இருப்பேன்: மனைவி பிறந்தநாளில் பும்ரா நெகிழ்ச்சி!
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது மனைவி பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013ஆம் ஆண்டு அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவுக்கு 2018-இல் விளையாடத் தொடங்கினார்.
தற்போது, உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளராக அறியப்படும் பும்ரா கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினி சஞ்சனாவை கடந்த 2021இல் திருமணம் செய்தார்.
இந்தத் தம்பதிகளுக்கு 2 வயதாகும் அங்காட் எனும் ஆண் குழந்தை இருக்கிறான்.
சமீபத்தில் இந்தக் குழந்தை ஐபிஎல் போட்டியை காணவந்தபோது அமைதியாக இருந்ததால் சமூக வலைதளங்களில் பலரும் அந்தக் குழந்தைக்கு மனரீதியாக பிரச்னை இருப்பதாக பதிவிட்டது சர்ச்சையானது.
இது குறித்து சஞ்சானா மிகவும் வருத்தப்பட்டு இப்படியெல்லாம் பதிவிட வேண்டாமென கண்டித்தார்.
இந்நிலையில் சஞ்சனா பிறந்தநாளில் அவரது நடன விடியோவை பகிர்ந்த பும்ரா கூறியதாவது:
பிறந்தநாள் வாழ்த்துகள் என் இதயமே. உனக்கு எப்போதுமே மகிழ்ச்சியும் காதலுக்கு இருக்குமென வாழ்த்துகிறேன். உன்னுடைய எல்லா கடினமான நாள்களிலும் நானும் நமது மகனும் உடன் இருப்போம். நாங்கள் உன்னைக் காதலிக்கிறோம் எனக் கூறியுள்ளார்.