செய்திகள் :

ஐபிஎல்லில் புதிய சாதனை! ஜோஸ் பட்லர் அசத்தல்!

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன் - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் ரன்கள் 224 எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 64 ரன்களும் (37 பந்துகளில், 4 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்தனர்.

இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் 12 ரன்கள் எடுத்தபோது, தனது டி20 வாழ்க்கையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல்லில் 4,000 ரன்களை நிறைவு செய்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றுள்ளார். மேலும், 4,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய மூன்றாவது வேகமான பேட்ஸ்மேனாக என்ற சிறப்பையும் பட்லர் பெற்றுள்ளார்.

குறைந்தபந்துகளில் 4000 ரன்களை எட்டியவர்கள்

  • ஏபி டிவில்லியர்ஸ் - 2658 பந்துகள்

  • ஜோஸ் பட்லர் - 2677 பந்துகள்

  • சூர்ய குமார் யாதவ் - 2714 பந்துகள்

ஐபிஎல்லில் 116 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பட்லர், 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதில், 7 சதங்கள் மற்றும் 23 அரைசதங்களும் அடங்கும்.

இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகளுக்கு தடை! - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகள் விளையாடுவதற்கு உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.கால்பந்து அசோசியேசன் பெண்களுக்கான விளையாட்டுப் போ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று (மே 2) அறிவிக்கப்பட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இட... மேலும் பார்க்க

2026 மகளிர் டி20 உலகக் கோப்பை: லார்ட்ஸ் திடலில் இறுதிப்போட்டி!

2026 ஆம் ஆண்டுக்கான டி20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இந்... மேலும் பார்க்க

பாக். முன்னாள் வீரர் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் முடக்கம்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி வருவதாகக் கூறி முடக்கப்பட... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டும் முன்னாள் வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க

ஆசிய போட்டி 2026: மீண்டும் கிரிக்கெட் தக்கவைப்பு!

ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இருக்குமென ஓசிஏ (ஒலிம்பிக் கவுன்சில் ஆஃப் ஏசியா) உறுதியளித்துள்ளது. ஆசிய போட்டிகள் ஜப்பானில் வரும் செப்.19 முதல் அக்.4ஆம் தேதிவரை நடைபெற இருக்கின்றன. நகோயா நகரத்த... மேலும் பார்க்க