செய்திகள் :

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

post image

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (22), திவாகரன் (24),குமரேசன் (36), கன்னியப்பன் (70),பாலகிருஷ்ணன் (52), சேகர் (44),ஜனா (22) ஆகிய ஏழு பேரும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஒரு காரில் , புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பர்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் உள்ள தடுப்பு சுவர், மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேகர், ஜனா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த ஐந்து பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட... மேலும் பார்க்க

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று தாமதமாகப் புறப்படும்!

நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயில் இன்று 3 மணி நேரம் காலதாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து இன்று(மே 3) பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்ப... மேலும் பார்க்க

மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் 132.91 கோடி முறை பயணம்!

சென்னை: மகளிர் விடியல் பயணத் திட்டம் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை சென்னையில் மட்டும் சுமார் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

திமுக பொதுக்குழுக் கூட்டம் எப்போது? - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி... மேலும் பார்க்க

தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி விலகல்?

தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக நல்லதம்பி, பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் 9-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தொடா்ந்து 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூ... மேலும் பார்க்க