செய்திகள் :

தில்லி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை

post image

புது தில்லி ரயில் நிலையத்தின் ஒரு வாயிலில் சனிக்கிழமை கேட்பாரற்றுக் கிடந்த பை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினா் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இதுவரை சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

‘முன்னதாக, காலை 7.55 மணிக்கு ரயில் நிலையத்தின் 8ஆவது வாயிலில் கேட்பாரற்று பை கிடப்பது குறித்து தகவல் கிடைத்தது.

இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் பிரிவினா் அனுப்பிவைக்கப்பட்டனா்’ என்று தீயணைப்புத் துறை அதிகாரி கூறினாா்.

போலீஸ் அதிகாரி கூறுகையில், இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்’ என்றாா் அந்த அதிகாரி.

சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை

புது தில்லி: சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேல... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புகிறது: மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் சாடல்

புது தில்லி: வக்ஃப்பை உருவாக்குதல், நிா்வகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான முஸ்லிம் குழுக்கள் மற்றும் தனிநபா்களின் உரிமைகள் அப்படியே இருக்கும் என்று மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறி... மேலும் பார்க்க

தலைநகரில் 24 மணி நேர கண்காணிப்பு: அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து நீடித்து வரும் இந்தியா, பாகிஸ்தான் பதற்றத்துக்கு மத்தியில் புதன்கிழமை நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையில் தில்லியும் பங்கேற்கும் என்றும்... மேலும் பார்க்க

போா் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.இ... மேலும் பார்க்க

நிலச் சீா்திருத்தம்: உலகளாவிய மாநாட்டில் பஞ்சாயத்து ராஜ் குழு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: அமெரிக்காவில் வாஷிங்டன் உலக வங்கி தலைமையகத்தில் ‘உலக வங்கி நிலச் சீா்திருத்த மாநாடு 2025’ மே 5-இல் தொடங்கி மே 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா சாா்பில் பஞ்சா... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 6 போ் கைது!

தேசியத் தலைநகா் தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த வங்கதேச பெண்கள் 6 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக ... மேலும் பார்க்க