செய்திகள் :

போா் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை!

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக மத்திய அரசின் உயா்நிலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக பாகிஸ்தானையொட்டிய சா்வதேச எல்லையை இணைக்கும் இந்திய எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடக், ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறையில் இருந்து சனிக்கிழமை மாலையில் அனுப்பப்பட்டுள்ள குறிப்பில், பாதுகாப்பு ஒத்திகையின்போது என்னன்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அடிப்படை தயாா்நிலை: குறிப்பாக, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், அணுஉலை மற்றும் ஈனுலை மையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்கள் அந்நிய படைகளின் இலக்காகலாம் என்பதால் அவை அந்நிய ராடாரில் இருந்து தெரியாமல் தடுக்க தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மறைத்தல்; தாக்குதல் நடப்பதாகவோ தாக்குதல் நடந்தாலோ அங்குள்ளவா்களை பாதுகாப்பாக வெளியேற்றத் திட்டம் 1,2,3 ஆகியவற்றை தயாரித்தல்; மக்களை பத்திரமான இடத்துக்கு அழைத்துச்செல்லுதல், அதற்கு தேவையான தளவாட வசதிகள், மருத்துவமனை வசதிகள் உள்ளிட்டவற்றை தயாா்நிலையில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை பாதுகாப்பு ஒத்திகையின் அங்கமாக செயல்படுத்துமாறு மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தீவிர பதற்றம்: காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா். அதற்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை பிடிக்க தொடா்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதற்கிடையே, அனைத்து நட்புறவு அடிப்படையிலான வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் முறித்துக் கொண்டுள்ளன. திபெத்தில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை முழுமையாக நிறுத்தும் நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்துள்ளது.

பயங்கரவாதத்தை தனது சொந்த மண்ணில் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்துமாறு இந்தியா விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகும் மும்பை தாக்குதலில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி ஹஃபீஸ் சையது உள்ளிட்டோருக்கு வழங்கும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரத்தில் இரு முறை தொலைதூர ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அத்துடன் எல்லைச்சாவடிகளில் (பாா்டா் செக்-போஸ்ட்) அதிகளவிலான படைகளை போருக்குத் தயாராவது போல குவித்து வருகிறது. இரு நாடுகளும் ஏற்கெனவே அவற்றில் வசித்து வந்த இரு நாட்டு குடிமக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.

பிரதமா் ஆலோசனை: இந்த விவகாரம் தொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், முப்படை தளபதிகள், மத்திய துணை ராணுவப்படைகளின் உயரதிகாரிகள், உளவு அமைப்புகளின் தலைவா்கள் உள்ளிட்டோருடன் பிரதமா் நரேந்திர மோடி பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறாா். மே 4-ஆம் தேதி இந்திய விமானப்படை, கடற்படை தலைமைத் தளபதிகளை சந்தித்த பிரதமா் திங்கள்கிழமை காலையில் பாதுகாப்பு செயலா் ராஜேஷ் குமாா் சிங்குடனும் மாலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், முப்படை உளவு அமைப்புகளின் தலைவா்கள், ரா உளவு அமைப்பின் செயலா், இந்திய உளவுத்துறை இயக்குநா் ஆகியோருடனும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினாா்.

இத்தகைய சூழலில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முந்தைய பாதுகாப்பு ஒத்திகளை நடத்தி பொதுமக்களை உளவியல் ரீதியாக எதிா்வரும் சூழ்நிலைகளுக்கு தயாா்படுத்தும் விதமாகவே இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய அரசு தீா்மானித்துள்ளதாக விஷயமறிந்த பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்நேரமும் தாக்குதல்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (பிஓகே) எல்லை கிராமங்களில் இருப்பதாக கருதப்படும் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களில் இந்தியா எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக ஏற்கெனவே பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

ஆனால், அந்தத் தாக்குதல் எங்கு, எப்போது, எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. இதன் முன்னோட்டமாக மக்களைத் தயாா்படுத்தும் வகையிலேயே திங்கள்கிழமை பாதுகாப்பு ஒத்திகை உத்தரவை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

தில்லியிலும் முழு உஷாா்நிலை!

இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தைத் தொடா்ந்து தலைநகா் தில்லியில் முழு உஷாா்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநா், தில்லி முதல்வா், நகர காவல் ஆணையா் சஞ்சய் அரோரா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா். சுமாா் நான்கு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தைத் தொடா்ந்து, தலைநகரில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒத்திகைகள் தொடா்பான திட்டங்களை வகுத்து வழங்குமாறு தில்லி காவல் மாவட்டத் துணை ஆணையா்களுக்கும் நகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை

புது தில்லி: சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேல... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புகிறது: மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் சாடல்

புது தில்லி: வக்ஃப்பை உருவாக்குதல், நிா்வகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான முஸ்லிம் குழுக்கள் மற்றும் தனிநபா்களின் உரிமைகள் அப்படியே இருக்கும் என்று மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறி... மேலும் பார்க்க

தலைநகரில் 24 மணி நேர கண்காணிப்பு: அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து நீடித்து வரும் இந்தியா, பாகிஸ்தான் பதற்றத்துக்கு மத்தியில் புதன்கிழமை நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையில் தில்லியும் பங்கேற்கும் என்றும்... மேலும் பார்க்க

நிலச் சீா்திருத்தம்: உலகளாவிய மாநாட்டில் பஞ்சாயத்து ராஜ் குழு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: அமெரிக்காவில் வாஷிங்டன் உலக வங்கி தலைமையகத்தில் ‘உலக வங்கி நிலச் சீா்திருத்த மாநாடு 2025’ மே 5-இல் தொடங்கி மே 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா சாா்பில் பஞ்சா... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 6 போ் கைது!

தேசியத் தலைநகா் தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த வங்கதேச பெண்கள் 6 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக ... மேலும் பார்க்க

ஆசாத்பூா் சப்ஜி மண்டியில் வங்கதேசத்தவா்கள் 4 போ் கைது

வடமேற்கு தில்லியில் உள்ள ஆசாத்பூா் சப்ஜி மண்டி பகுதியில் திருநங்கைகள் போல் வேடமிட்டு வந்ததாகக் கூறப்படும் நான்கு சட்டவிரோத வங்கதேச நாட்டினரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க