செய்திகள் :

ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 6) சவரனுக்கு ரூ. 2000 உயர்ந்து ரூ. 72,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்துவந்த நிலையில், மே 3-ஆம் தேதி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 8,755-க்கும், சவரன் ரூ. 70,040-க்கும் விற்பனையானது.

அதைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 8,775-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2000 உயர்ந்து ரூ. 72,200-க்கும் கிராமுக்கு ரூ. 250 உயர்ந்து ரூ. 9,025-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 107.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 100 குறைந்து ரூ. 1,07,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலம்!

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி அறியலாம்?

தமிழகத்தில் மே 8ஆம் தேதி பனிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் எ... மேலும் பார்க்க

அடகுக் கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு!

அரியலூர்: அரியலூரில் அடகுக் கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ராஜஸ்தா... மேலும் பார்க்க

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கத்திரி வெய்யில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய... மேலும் பார்க்க

ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடை... மேலும் பார்க்க

சாலை வசதியின்றி மயானத்துக்கு உடலை எடுத்துச்செல்ல சிரமப்படும் கிராம மக்கள்!

சிவகங்கை: சிவகங்கை அருகே மயானத்துக்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்டி க... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: குடிசை, வாகனங்களுக்கு தீ வைப்பு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்‌. குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்து எரிக... மேலும் பார்க்க