செய்திகள் :

சாலை வசதியின்றி மயானத்துக்கு உடலை எடுத்துச்செல்ல சிரமப்படும் கிராம மக்கள்!

post image

சிவகங்கை: சிவகங்கை அருகே மயானத்துக்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தையொட்டி பெரியாறு பாசனக்கால்வாய் அமைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 25 அடி ஆழமும் சுமார் 6 அடி அகலத்தில் கால்வாய் தோண்டப்பட்டு அதில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த 78 வயதான மூதாட்டி திங்கள்கிழமை காலமான நிலையில், பிற்பகலில் அவரது உடலை மயானத்துக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்ய அவரது உறவினர்களும் கிராம மக்களும் 25 அடி பள்ளத்தில் இறங்கி மறுபுறம் சிரமத்துடன் ஏறி மயானத்துக்குக் கொண்டு சென்றனர்.

இந்த ஊரின் மயானத்துக்கு போதிய சாலை வசதி இல்லாததால், வயல்வெளி மற்றும் தோட்டம் ஆகியவைகளின் வழியாக சுமந்து சென்று இறுதிச்சடங்கை நிறைவேற்றினர்.

இது குறித்து திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகர் கூறியதாவது: எதிர்பாரமல் இறந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கை மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது.

பெரியாறு பாசன கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை கடந்து செல்ல பாலம் இல்லாததால் இந்த சிரமம் ஏற்பட்டது. கால்வாய் பணிகள் முடிய எவ்வளவு மாதங்கள் ஆகும் எனத் தெரியவில்லை. அதுவரை இந்தக்கால்வாயைக் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களின் துயரம் தீரும் என்றார் அவர்.

இதையும் படிக்க: போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ் கடும் விமரிசனம்!

முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர் கொலைகள்- ஜாதிய மோ... மேலும் பார்க்க

ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார... மேலும் பார்க்க

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி அறியலாம்?

தமிழகத்தில் மே 8ஆம் தேதி பனிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் எ... மேலும் பார்க்க

அடகுக் கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு!

அரியலூர்: அரியலூரில் அடகுக் கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ராஜஸ்தா... மேலும் பார்க்க

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கத்திரி வெய்யில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய... மேலும் பார்க்க

ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடை... மேலும் பார்க்க