செய்திகள் :

போர்ப் பாதுகாப்பு ஒத்திகை: தொண்டர்களுக்கு பாஜக அழைப்பு!

post image

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் கலந்துகொள்ள கட்சியின் தலைவர்கள், தொண்டர்களுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, எந்நேரமும் பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதலைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு மேற்கொள்ளும் போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் தன்னார்வலர்களாக கலந்துகொள்ள பாஜக தலைவர்கள், தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் நிலையில், அந்தந்த பகுதிகளில் உள்ள பாஜக தொண்டர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, ஒபுலாபுறத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப்பின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

பஞ்சாப் மாநிலத்தின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களினால் இந்தியா மற்றும் பாகிஸ்த... மேலும் பார்க்க

தெலங்கானா: சத்தீஸ்கரின் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த 14 மாவோயிஸ்டுகள் தெலங்கானா மாநில காவல் துறையினரிடம் சரண்டைந்துள்ளனர். தெலங்கானாவின் பத்ராத்ரி கொதாகுதெம் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான் பி.ரோஹித் ராஜுவின் முன்னி... மேலும் பார்க்க

பட்டாசுகளுக்குத் தடை விதிக்க உ.பி., ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களுக்கு உத்தரவு!

ஒரு மாதத்திற்குள் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தில்லியில் காற்று மாசுபாடு தொடர்பான மனுவை வி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை! முக்கிய சேவைகள் பாதிக்கப்படுமா?

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருப்பதற்கான சோதனை மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள் விவகாரத் துறை அறிவுறுத... மேலும் பார்க்க

இந்திய எல்லையினுள் ஊருவிய பாகிஸ்தானியர் கைது!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவினுள் ஊருவிய பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தானின் கட்டுப்பா... மேலும் பார்க்க