செய்திகள் :

அதிகபட்ச பேட்டரி திறனுடன் வருகிறது ரியல்மீ ஜிடி!

post image

ஸ்மார்ட்போன் உலகில் இதுவரை இல்லாத வகையில் 10000mAh பேட்டரி திறனுடன் ரியல்மீ ஜிடி உருவாகி வருகிறது.

பல முன்னணி நிறுவனங்களின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்ட ஸ்மாட்ர்போன்கள் கூட இந்த அளவுக்கு பேட்டரி திறன் கொண்டதாக இல்லை.

இதனிடையே பேட்டரியில் கூடுதல் திறனை வழங்குவதன் மூலம் பயனர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ரியல்மீ.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல்மீ நிறுவனம், இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த பயனர்களைக் கொண்டுள்ளது. ஷாவ்மி, ஓப்போ, விவோ நிறுவனங்களுக்குப் போட்டியாக ரியல்மீ நிறுவனமும் பல புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத வகையில் 10000mAh திறன் கொண்ட ஸ்மாட்ர்போனை ரியல்மீ உருவாக்கவுள்ளது. இதன் சோதனை முயற்சிகளில் அந்நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இதற்காக அதிகபட்ச சிலிகான் தனிமங்களைச் சேர்த்து ஆனோடு பேட்டரிகளை உருவாக்குகிறது. இதன்மூலம் எடையைக் கூட்டாமல், பேட்டரியின் திறனை மட்டும் அதிகரிக்க இயலும். மேலும், இதனுடன் ரியல்மீ ஜிடி ஸ்மார்ட்போனில் இடம்பெறும் அம்சங்கள் மக்கள் தேவைகளை நிறைவு செய்யுமாயின், பல பயனர்களின் தேர்வு ரியல்மீ ஜிடி-யாகவே இருக்கும்.

ஸ்மார்ட்போன்களில் நிலவும் பேட்டரி திறன் பற்றாக்குறை, பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை என்பதை உணர்ந்து, அதனை நிறைவு செய்யும் வகையில், இந்த ஸ்மார்ட்போனை ரியல்மீ உருவாக்குகிறது.

ரியல்மீ ஜிடியின் மற்ற அம்சங்கள் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அந்த அம்சங்களும் மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராவில் மாற்றம் செய்கிறது ஆப்பிள்?

பேங்க் ஆப் பரோடா 4வது காலாண்டு லாபம் 3% அதிகப்பு!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியின் நிகர லாபம், 2025ஆம் நிதியாண்டின், மார்ச் வரையான காலாண்டில், 3 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,048 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்ட... மேலும் பார்க்க

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.84.45-ஆக முடிவு!

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.84.45-ஆக நிலைபெற்றது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்று வரும் புவிசார் அ... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 155.77 புள்ளிகளும் நிஃப்டி 81.55 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!

மும்பை: பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு நடுவில், முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தில் லாபத்தை முன்பதிவு செய்ததால், இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து முடிந்தன.இன்றைய ஆரம்ப வர்த்தகத்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த எலக்ட்ரிக் கார்கள்

நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட்டில் ரூ.10 லட்சத்துக்குள் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மின்சார கார்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். டாட்டா பஞ்ச் இவிTATA PUNCH EVஇந்தியாவில் மின்சார கார்கள் ... மேலும் பார்க்க

நிறைவான அம்சங்களுடன் ரூ.10,000-க்கு ஸ்மார்ட்போன்!

ரூ. 10 ஆயிரத்துக்கு கீழ் விலையை நிர்ணயித்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். லாவா நிறுவனத்தின் யுவா ஸ்டார் 2 என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிம... மேலும் பார்க்க

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராவில் மாற்றம் செய்கிறது ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமராவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுகமாகும் நிலைய... மேலும் பார்க்க