செய்திகள் :

அடகுக் கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு!

post image

அரியலூர்: அரியலூரில் அடகுக் கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம், வில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விகாஸ்ஜெயின். இவர், அரியலூரில் தங்கி, அங்கு சின்னக்கடைவீதியில் அரிஹந்த் சிவன் பேங்கர்ஸ் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயாரை பார்க்க ராஜஸ்தான் சென்றுள்ளார்.

இதற்கிடையே அவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஆசாத் லோடா என்பவரை கடைக்கு வேலைக்கு சேர்த்துள்ளார். இக்கடைக்கு வரும் அடகு நகைகளை, உறவினர் கடையான நானேஸ் பேங்கர்ஸ் அடகு கடையிலுள்ள பெட்டகத்தில் வைப்பது வழக்கம்.

அதன்படி, கடந்த 3 ஆம் தேதி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைக்கச் சென்ற கடை பணியாளர் ஆசாத்லோடா மாயமாகியுள்ளார். அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விகாஸ்ஜெயின், நேரில் வந்து பெட்டகத்தை பார்த்த போது, அதில் இருக்க வேண்டிய 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர், செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி எச்சரிக்கை

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் மிதமான மழை!

தமிழகத்தில் மே 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர்... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது: தொல். திருமாவளவன்

சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மா... மேலும் பார்க்க

மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ் கடும் விமரிசனம்!

முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர் கொலைகள்- ஜாதிய மோ... மேலும் பார்க்க

ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார... மேலும் பார்க்க