செய்திகள் :

கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!

post image

கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

கோவாவின் ஷிர்கா பகுதியில் உள்ள லைராய் தேவி கோயிலில் புகழ்பெற்ற ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை பக்தர்கள் சரிவான பாதையில் வந்துகொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தும் விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?

கோழிக்கோடு: வட கேரளத்தில் கோழிக்கோடு நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு தனி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

பஜ்ரங்தள் தொண்டா் கொலை வழக்கில் 8 பேர் கைது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பஜ்ரங்தள் தொண்டா் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்துள்ளார். மங்களூரில் வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் சாலையில் பயங்கர ஆ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்கை!

பாகிஸ்தான் மீதான போருக்கு ஆதரவளிப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ... மேலும் பார்க்க

கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம்

பனாஜி: கோவா யூனியன் பிரதேசத்திலுள்ள பிச்சோலிம் பகுதியில் பிரசித்திபெற்ற 'ஸ்ரீ லய்ராயி திருக்கோயில்’ அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜாத்ரா’ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுற்றுவட... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க