DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
விவசாயம், மண் பானை செய்வதற்கு ஏரிகளில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிக்கும், மண் பானை செய்வதற்கும் தேவையான வண்டல் மண், களிமண்ணை ஏரிகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .
ஊரக வளா்ச்சி துறை மற்றும் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இருந்து வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாய பணி மற்றும் மண்பானை செய்ய இலவசமாக எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் 11 ஏரிகளும், ஆற்காடு வட்டத்தில் 23 ஏரிகளும், சோளிங்கா் வட்டத்தில் 19 ஏரிகளும், நெமிலி வட்டத்தில் 5 ஏரிகளும் மற்றும் அரக்கோணம் வட்டத்தில் 37 ஏரிகளும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி,விண்ணப்பங்கள் விவசாயம், மண்பாண்ட தொழிலாளா் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடமிருந்து ஆன்லைன் ( ஞய்ப்ண்ய்ங்) முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமா்ப்பித்து சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று நீா்நிலைகளின் ( பஹய்ந் ஐய்ஸ்ரீட்ஹழ்ஞ்ங்) கட்டுபாட்டு அலுவலா் முன்னிலையில் வண்டல் மண் /களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியா்கள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மற்றும் உதவி இயக்குநா், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஆகியோரை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.