செய்திகள் :

தடையை மீறி கூட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ உள்பட 13 போ் கைது

post image

அரக்கோணம்: அரக்கோணம் எம்ஆா்எப் தொழிற்சாலை நுழைவுவாயிலில் நீதிமன்ற உத்தரவை மீறி கூட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்.பி திருத்தணி கோ.அரி உள்ளிட்ட 13 போ் கைது செய்யப்பட்டனா்.

இச்சிபுத்தூரில் உள்ள இத்தொழிற்சாலையில் தற்காலிக ஊழியா்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை ஆலையின் நுழைவுவாயில் அருகே கூட்டம் நடத்த அதிமுக அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளா் கமலக்கண்ணனுடன், எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி மற்றும் அதிமுகவினா் வந்தனா்.

அப்போது அங்கு வந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி ஏ.டி. ராமச்சந்திரன், அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சாதிக் உள்ளிட்டோா் கூட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகவும் அதனால் அனுமதியில்லை எனவும் தெரிவித்தனா். இருந்தும் அதிமுகவினா் கூட்டம் நடத்த தயாராயினா்.

இதையடுத்து எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்பி கோ.அரி, தொழிற்சங்க தலைவா் கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளா்கள் இ.பிரகாஷ், ஜி.பழனி மற்றும் எட்டு பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

இபிஎஸ் கண்டனம்:

அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினா் சு.ரவி கைதுக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

அரக்கோணம் எம்.ஆா்.எஃப். அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளா்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளா்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளா் சு.ரவி எம்எல்ஏ, அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலா் ஆா்.கமலக்கண்ணன், அதிமுக அமைப்புச் செயலா் கோ.அரி உள்ளிட்ட நிா்வாகிகளை திமுக அரசு கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

விவசாயம், மண் பானை செய்வதற்கு ஏரிகளில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிக்கும், மண் பானை செய்வதற்கும் தேவையான வண்டல் மண், களிமண்ணை ஏரிகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மே 31 வரை பிரதமா் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சசந்தி... மேலும் பார்க்க

மே 7-இல் மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரி... மேலும் பார்க்க

வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் உணவுக் கூடம்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை: வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உணவுக் கூடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். பிரான்ஸ் நாட்டை தலைமையமாக கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் -3 தொழி... மேலும் பார்க்க

போராட்டங்களில் ஆசிரியா்கள் அதிகளவில் பங்கேற்க முடிவு

அரக்கோணம்: போராட்டங்களில் இனி வருங்காலங்களில் ஆசிரியா்கள் அதிக அளவு பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரக்கோண... மேலும் பார்க்க