செய்திகள் :

``ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க காரணமே மோடி தான்” - வானதி சீனிவாசன் பெருமிதம்

post image

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் பொது மக்களை சுட்டுக் கொன்றதை கண்டித்து பாஜக சார்பில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கோவை, தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது,

வானதி சீனிவாசன்

நிச்சயம் பதிலடி கொடுப்போம்

“சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணமே மோடி தான். பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எங்கள் மீது கை வைத்தால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று இந்தியா உறுதியாக உள்ளது. காஷ்மீர் சம்பவத்துக்கு பிறகு, பிரதமர், ராணுவம் குறித்து தவறாக பேசுபவர்கள் திமுக ஆதரவு பெற்ற அரசியல் சக்தியாக இருக்கின்றனர். நாட்டை இரண்டாக பிளப்பதற்கோ, மக்களை மத ரீதியாக கொல்வதற்கோ பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.” என்றார்.

ஆர்ப்பாட்டம்

பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “மத்திய அரசு அறிவுறுத்தல் படி, தமிழக அரசு இங்கு சட்ட விரோதமாக தங்கி இருக்கக் கூடிய நபர்களை கண்டறிந்தார்களா. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்களா.  

கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு சிலிண்டர் வெடித்திருந்தால் 100 பேர் இறந்திருப்பார்கள். இதுதொடர்பாக தமிழக காவல் துறையிடமிருந்து எந்த அறிக்கையும் இல்லை. தமிழக அரசு அவர்களின் ஓட்டு வங்கிக்காக எந்த தேச விரோத செயல்களை யார் செய்தாலும் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் மீது விரோத மனப்பான்மையில் இருக்கிறது.

கோவை

தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள் தங்குகிறார்கள். கோவையில் சட்ட விரோதமாக வெளிநாட்டினர் தங்கி இருக்கக் கூடிய தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.” என்றார்.

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: அவிழாத முடிச்சுகள்; ஓராண்டாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்... மேலும் பார்க்க

India - Pakistan: அமெரிக்கா, சீனா, மலேசியா... போர் ஏற்பட்டால் உலக நாடுகள் யார் பக்கம்? | Explained

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த விரிசல் போராக உருவெடுக்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரண்டு நாடுகளும் ... மேலும் பார்க்க

”தற்போது 2 விக்கெட்தான் விழுந்துள்ளது.. தமிழகத்தில் இன்னும் பல விக்கெட் விழும்”- கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளார்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”அடுத்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பார். இது காலத்தின் க... மேலும் பார்க்க

``ஹீரோ திமுக, வில்லன் அதிமுக; மற்றவர்கள் குறுக்க மறுக்கா..!’ - எம்.எம்.அப்துல்லா

"ஒரு படம் எடுத்துகொண்டால், ஹீரோவும், வில்லனும் தான். அப்படி, ஹீரோ தி.மு.க... வில்லன் அ.தி.மு.க அவ்வளவுதான். குணச்சித்திர நடிகர்கள் குறுக்க மறுக்கா வந்து செல்வார்கள். அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள ... மேலும் பார்க்க

'மாபெரும் வீரன்; தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தலைவணங்குகிறேன்' - நயினார் நாகேந்திரன்

'சமீபத்தில் காஷ்மீரில் இருக்கும் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதைக்கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் எழும்பூரில் கண்டன ஆர்ப்ப... மேலும் பார்க்க

Mock Drills: `நாடு தழுவிய அவசரகால பாதுகாப்பு ஒத்திகை' - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. இரண்டு நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடு... மேலும் பார்க்க