செய்திகள் :

”தற்போது 2 விக்கெட்தான் விழுந்துள்ளது.. தமிழகத்தில் இன்னும் பல விக்கெட் விழும்”- கடம்பூர் ராஜூ

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளார்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”அடுத்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பார். இது காலத்தின் கட்டாயம். நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க தாங்கள் அசைக்க முடியாத சக்தி என்ற எண்ணத்திலிருந்து 40-க்கு 40 வெற்றி பெற்றனர். கடந்த நான்கு மாதங்களாக நடைபெறும் சம்பவங்கள் தி.மு.கவின் உண்மை சுய ரூபத்தை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் காட்டி வரும் நிகழ்வுகளாக ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருகிறது. தற்போது தி.மு.கவிற்கு கவுண்டவுன் ஆரம்பித்துவிட்டது.

கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க டெல்லியில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கூறியுள்ளார். நிச்சயமாக தி.மு.க தமிழகத்தில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகிவிடும். சட்டசபை நடக்கும் போதே இரண்டு அமைச்சர்கள் விலகும் நிலை உள்ளது. சட்டமன்றம் முடிய ஒரே ஒருநாள் இருக்கும்போதுகூட அந்த அமைச்சர்களை காப்பாற்ற முடியாத நிலையில் முதல்வர் இருக்கிறார் இதுதான் இந்த ஆட்சியின் நிலைமை.

33-ல் தற்போது இரண்டு விக்கெட்தான் விழுந்து உள்ளது. இன்னும் விக்கெட் மளமளவென சரியும். அதோடு இந்த ஆட்சி வீட்டுக்கு போகக்கூடிய சூழ்நிலை நிச்சயமாக வரும். பல அமைச்சர்கள் தேர்தலில் நிற்க முடியாத சூழ்நிலை எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.கவுடன் சேர மாட்டீர்கள் என்று சொன்ன நீங்கள் ஏன் சேர்ந்தீர்கள் என பள்ளிக்கூட குழந்தை போல முதல்வர் கேட்கிறார்.

கடம்பூர் ராஜூ

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து ஆளும் அ.தி.மு.கவை தவிர எல்லோரும் ஆதரித்து விட்டனர் என்று முதல்வர் பேசுகிறார்.  ஒரு முதல்வர் எதிர்க்கட்சியை பார்த்து ஆளுங்கட்சி என்று சொன்ன வரலாறு எங்காவது உண்டா? தி.மு.கவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது புத்தி பேதலித்து போய்  பயத்தின் உச்சத்தில் பேசுகின்றனர்.” என்றார்.

'ஸ்டாலின் மாடல் ஆட்சி; சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி'- எடப்பாடி விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' என்று ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவ... மேலும் பார்க்க

"நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அண்ணாமலை இன்னும்..." - திருமாவளவன்

ஈரோட்டில் நான்கு நாள்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறது.இவ்வாறிருக்க, இச்சம்பவத்தின்... மேலும் பார்க்க

`சண்டையிடுவதில் எந்த பலனும் இல்லை..!’ - மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விரும்பும் இளவரசர் ஹாரி

பிரிட்டன் இளவரசர் ஹாரி பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தனது மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விருப்பம் தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்க்க... மேலும் பார்க்க

'ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்; அடிமைக் கட்சியல்ல திமுக!' - முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், "நம் உயிருடன் கலந்திருக்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் இருக்கிறோமா... வேறு எங்காவது இருக்கிறோமா?' - நயினார் நாகேந்திரன் காட்டம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை பாஜக அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது... மேலும் பார்க்க

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: அவிழாத முடிச்சுகள்; ஓராண்டாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்... மேலும் பார்க்க