செய்திகள் :

54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!

post image

நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(மே 6) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

குறிப்பாக, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியார் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கடைசியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் நாளை பெறவுள்ளது.

போர் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த கல்பாக்கம், ஆவடி, மீனம்பாக்கம், மணலி ஆகிய பகுதிகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

இதையும் படிக்க: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி எச்சரிக்கை

காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? கார்கே

காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே அறிந்ததால் பிரதமர் காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். உளவுத்துறை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு

புது தில்லி; நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் 7 நாள்களுக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: கடற்படை அதிகாரியின் குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் வினஸ் நர்வாலின் குடும்பத்தினரைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.நர்வாலின் குடும்பத்தினரை சந்திக்க மக்களவை எத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் ஒருவர் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தீஸ்கர்-தெலங்கானா எல்... மேலும் பார்க்க

போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நாடு முழுவதும் 250 இடங்களில் புதன்கிழமை போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, எந்நேரமும் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியீடு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க