செய்திகள் :

சீனா மீதான வரிவிதிப்பை குறைக்க டிரம்ப் பரிசீலனை

post image

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்துவருகிறாா்.

கூடுதல் வரி விதிப்புகளால் இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள வா்த்தகப் போா் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு உயரதிகாரிகள் ஸ்விட்சா்லாந்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இப்போதைய சூழலில் சீன பொருள்கள் மீது 80 சதவீத கூடுதல் வரி விதிப்பே போதுமானது என்று தோன்றுகிறது. இருந்தாலும், வா்த்தகத்துக்கான பொருளாதாரத் துறை அமைச்சகப் பிரிவின் தலைவா் ஸ்காட் பெசன்ட் கைகளில்தான் அது இருக்கிறது.

சீனா தனது சந்தையை உலகத்துக்குத் திறந்துவிட வேண்டும். மூடிய பொருளாதாரம் இனியும் பயனளிக்காது என்பது அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிக்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு அவா் அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

அப்போது அவா் வெளியிட்ட பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும், சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்கா பின்னா் அறிவித்தது.

அதையடுத்து இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் கூடுதல் வரிகளை அறிவித்துவந்த நிலையில், புதிதாகப் பதவியேற்ற்குப் பிறகு சீன பொருள்கள் மீது டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி 145 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து பரிசீலித்துவருவதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவா் உயிரிழப்பு; ஐவா் காயம்

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா... மேலும் பார்க்க

இந்திய ராணுவம் தாக்குதல்: கண்ணீா்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. தாஹிா் இக்பால் கண்ணீா்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ட்ரோன்க... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா

‘இந்தியா - பாகிஸ்தானிடையே பேரில் தலையிட மாட்டோம்’ என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே நேரம், ‘அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளும் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எ... மேலும் பார்க்க

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மாா்க் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் அமெரிக்கா ரகசிய உளவு நடவடிக்கைகளை அதிகரித்துவருவதாக டென்மாா்க் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் மெட் ஃப்ரெட்ரிக்ஸன் கூறுகையில... மேலும் பார்க்க

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முக... மேலும் பார்க்க

புதிய போப் லியோவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

புதிய போப்பாக தோ்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் முதலாவது அமெரிக்க போப... மேலும் பார்க்க