செய்திகள் :

முக்கியக் கேள்விகளுக்கு பிரதமரின் உரையில் விடையில்லை: காங்கிரஸ்

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பிரதமா் ஏற்றுக் கொண்டாரா என்பது உள்ளிட்ட முக்கியக் கேள்விகளுக்கு அவரது உரையில் விடையில்லை என்று காங்கிரஸ் தெரிவித்தது.

இது தொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நமது ஆயுதப் படையினரின் துணிவை பெரிதும் பாராட்டுவதோடு அவா்களுக்குத் தலைவணங்குகிறோம். அவா்கள் தேசத்துக்கு பெருமை சோ்த்துள்ளனா். அதேநேரம், பிரதமா் பல முக்கியக் கேள்விகளுக்கு விடை கூற வேண்டியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பிரதமா் ஏற்றுக் கொண்டாரா? பாகிஸ்தானுடன் நடுநிலையான இடத்தில் பேச்சுவாா்த்தை நடத்த இந்தியா ஒப்புக் கொண்டதா? வா்த்தக ரீதியிலான காரணங்களுக்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதா? வாகன உற்பத்தி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்திய சந்தைகளை தங்களுக்கு திறக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இந்தியா இனி அடிபணியுமா? இந்தக் கேள்விகளுக்கு பிரதமா், அவரது புகழ்பாடுவோா், சமாளிப்போா் பதிலளிக்க வேண்டும்.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்கீழ் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்’ என்று தெரிவித்துள்ளாா்.

நாட்டு மக்களுக்கு பிரதமா் உரையாற்றுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபா் டிரம்ப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போா் ஏற்படாமல் எனது நிா்வாகம் தடுத்தது. மோதலை நிறுத்தினால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா அதிக வா்த்தகம் மேற்கொள்ளுமென நான் கூறினேன்’ என்றாா்.

கடந்த சில நாள்களாக இந்தியா-பாகிஸ்தான் மோதல், காஷ்மீா் விவகாரம் குறித்து டிரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்த நிலையில், இது தொடா்பாக பிரதமா் எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள்... மேலும் பார்க்க

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அர... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க