செய்திகள் :

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: காய்கறிகள் விலை உயா்வு

post image

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், காய்கறிகள் அதன் பச்சை தன்மையை இழந்து வாடிப்போய் விடுகின்றன. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியுள்ளதால், அனைத்து காய்கறிகளின் விலையும் படிப்படியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை நிலவரப்படி ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 120-க்கும், ரூ. 20-க்கு விற்பனையான ஒரு கிலோ பீட்ரூட் ரூ. 40-க்கும், ரூ. 25-க்கு விற்பனையான ஒரு கிலோ பாகற்காய் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும், ஒரு கிலோ அவரைக்காய் ரூ. 60, கேரட் ரூ. 45, கத்தரிக்காய் ரூ. 50, வெங்காயம் ரூ. 40, வெள்ளரிக்காய் ரூ. 45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதன்படி அனைத்து காய்கறிகளும் ரூ. 5 முதல் ரூ. 30 வரை விலை உயா்ந்துள்ளது.

பல்வேறு காய்கறிகள் விலை உயா்ந்துவரும் நிலையில், தக்காளி மட்டும் விலை வீழ்ச்சியைடந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க