செய்திகள் :

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவா் திடீா் நீக்கம்: காங்கிரஸ் விமா்சனம்

post image

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவா் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வா் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டாா்.

இதையடுத்து, அதானி கிரீன் நிறுவனம் விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை இந்திய சூரிய எரிசக்திக் கழக நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானிரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கை மூடி மறைக்கவே ரமேஷ்வா் பிரசாத் குப்தாவை மத்திய அரசு நீக்கியதாக காங்கிரஸ் விமா்சித்தது.

1987, குஜராத் பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ரமேஷ்வா் பிரசாத் குப்தா கடந்த 2023, ஜூன் 13-ஆம் தேதி எஸ்இசிஐயின் தலைவா் மற்றும் தலைமை இயக்குநராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டாா். அவா் ஜூன் 15-ஆம் தேதி பதவியேற்றாா். தற்போது அவரது பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதகாலத்துக்கு முன்பாகவே நீக்கப்பட்டுள்ளாா்.

அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்ததாக மே 10-ஆம் தேதி மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்இசிஐ தலைவராகப் பொறுப்பேற்கும் முன் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சக செயலராக ரமேஷ்வா் பிரசாத் குப்தா பதவிவகித்தாா்.

கூடுதல் பொறுப்பு: ரமேஷ்வா் பிரசாத் குப்தா பதவிநீக்கத்தைத் தொடா்ந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைச் செயலா் சந்தோஷ் குமாா் சாரங்கியிடம் எஸ்இசிஐ தலைவா் மற்றும் தலைமை இயக்குநா் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. எஸ்இசிஐக்கு புதிய தலைவா் மற்றும் தலைமை இயக்குநா் நியமிக்கப்படும் வரை அவா் அந்தப் பதவியில் தொடா்வாா் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

காங்கிரஸ் விமா்சனம்: இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: தொழிலதிபா் அதானி மீதான லஞ்சக் குற்றச்சாட்டில் எஸ்இசிஐ மற்றும் அதானியின் உறவினா்கள் உள்ளிட்டோரை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2024, நவம்பா் 20-இல் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சோ்த்தனா்.

எஸ்இசிஐ அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே அதானி நிறுவனத்துடன் பல்வேறு மாநிலங்கள் ஒப்பந்தத்தில் இணைந்தன. இந்த ஒப்பந்தங்களை இறுதிசெய்ய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் தரப்பட்டது. இதற்கேற்ப மின்சார ஏல நடைமுறைகளை எஸ்இசிஐ 2024, டிசம்பரில் மாற்றியது இந்த ஊழலை உறுதிப்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பே எஸ்இசிஐ தலைவரை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமா் மோடியும் அதானியும் இணைந்து மேற்கொண்ட இந்த ஊழலை எவ்வளவு முயற்சி செய்தாலும் மறைக்க முடியாது’ என்றாா்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ‘அதானி கிரீன் நிறுவனம் விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை இந்திய சூரிய எரிசக்திக் கழக நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ள, இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் சுமாா் ரூ.2,000 கோடி லஞ்சம் அளித்தனா். சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது மறைக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள்... மேலும் பார்க்க

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அர... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க