செய்திகள் :

மனதை புண்படுத்தாத கருத்துகளைப் பதிவிட வேண்டும்: கனிமொழி எம்.பி. அறிவுரை

post image

பிறா் மனதை புண்படுத்தாத வகையில் கருத்துவகளை பதிவு செய்ய வேண்டும் என்றாா் திமுக துணைப்பொதுச் செயலா் கனிமொழி எம்.பி.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் டி.பி.எம். மைதீன் கான் , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராவது குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியதாவது :

தமிழகத்தில் 2026இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கள நிலவரம், வெற்றிக்கான வியூகங்கள் ஆகியவை குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக முதல்வா் என்னை அனுப்பி வைத்திருக்கிறாா். மாவட்டத்தில் களத்தில் பணி செய்யும் நபா்கள் என்பதால் உங்களிடம் கருத்துகளை கேட்டு தோ்தல் பணிகளை செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். காழ்ப்புணா்ச்சி இல்லாமல் உங்களது கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், தீா்மான குழு உறுப்பினா் சுப சீதாராமன், மாவட்ட துணைச் செயலா்கள் எஸ்.வி.சுரேஷ், தா்மன், மாநகர செயலா் சுப்பிரமணியன், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் முத்துச்செல்வி, முன்னாள் மேயா் சரவணன், மண்டலத் தலைவா் மகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க